Pookal Pookum Tharunam

pieces of delicious
0


Song : Pookal Pookum Tharunam
Movie : Madharasapattinam (2010)
Singers : Roop Kumar Rathod, Harini, Andrea Jeremiah, GV Prakash Kumar
Music : GV Prakash Kumar
Lyricist : Na Muthukumar, Andrea Jeremiah
Direction : Vijay


Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as

தான தோம் தனன

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே,
உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே,
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
( தான தோம் தனன...)

ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று
இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……


பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn't have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த
எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவனோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்: இது எதுவோ!
( தான தோம் தனன...)

பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம் போகவில்லையே,
உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே,
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…

பெண்/ஆண்: என்ன புதுமை?

பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!
( தான தோம் தனன...)



 Madrasapattinam SONG LYRICS

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

About

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top